
‘Don’t leave us in chaos, we want peace’: Rashid Khan’s appeal to ‘world leaders’ (Image Source: Google)
ஆஃப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஷித் கான். உலககின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவராக இவர் திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் தனது நாட்டில் தாலிபான்களின் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொலைசெய்யப்பட்டு வருவதாகவும், எங்களை காப்பாற்றுங்கள் என்றும் ரஷித் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளும் ஆக்கிரமித்திருந்தனர். பின்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப், ஆஃப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றப்படும் என அறிவித்தார். அதே போல தற்போதைய அதிபர் ஜோ பைடனும் வாக்குறுதி கொடுத்தார். இதனையடுத்து ஆஃப்கானில் இருந்து பெருவாரியான அமெரிக்கப்படைகள் வெளியேறிவிட்டன.