Advertisement
Advertisement
Advertisement

இஷாந்துக்கு பதிலா இவர டீம்ல எடுங்க - எம்எஸ்கே பிராசாத்!

தென் ஆப்பிரிக்க தொடரில் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக இளம்வீரர் முகமது சிராஜ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் தனது கருத்தை தெரிவித்துள்ளார்

Advertisement
“Don’t Think Ishant Will Be Considered Ahead Of Siraj” – MSK Prasad
“Don’t Think Ishant Will Be Considered Ahead Of Siraj” – MSK Prasad (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 24, 2021 • 11:24 AM

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை மறுதினம் 26 ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்க உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் ஏற்கனவே கடந்த பல நாட்களாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பிளேயிங் லெவனில் யார்? யார்? இடம்பிடிக்கப்போகிறார்கள் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 24, 2021 • 11:24 AM

அண்மையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்கள் தற்போது அணிக்கு திரும்பி உள்ளதால் அணியின் தேர்வு எவ்வாறு இருக்கப் போகிறது என்றும் பந்துவீச்சாளர்கள் எப்படி தேர்வு செய்யப்பட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

Trending

அந்த வகையில் தற்போது அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வரும் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக இளம்வீரர் முகமது சிராஜ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இஷாந்த் சர்மாவிற்கு தற்போது காயம் அதிகமாக அவரை வாட்டி வருகிறது. அதுமட்டுமின்றி அவரது ஃபார்மும் முன்பு போன்று சிறப்பானதாக இல்லை.

எனவே அவருக்கு பதிலாக சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அசத்தலாக செயல்பட்டு வரும் சிராஜ்-க்கு வாய்ப்பினை வழங்கலாம். ஏனெனில் அவர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட அசத்தலான பந்துவீச்சினை வெளிப்படுத்தினார். என்னை பொருத்தவரை இசாந்த் சர்மாவிற்கு பதிலாக நான் சிராஜ்ஜை தான் அணியில் தேர்ந்தெடுப்பேன்.

இந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது நான்கு பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க விரும்பினால் பும்ரா, ஷமி, அஷ்வின் மற்றும் சிராஜ் ஆகிய 4 பவுலர்களுடன் தான் இந்த போட்டியில் இந்திய அணி விளையாட வேண்டும்” தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement