
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் இரண்டையுமே வைட் வாஷ் செய்தது இந்திய அணி. நேற்று பெற்ற வெற்றியின் மூலம் 6 வருடங்களுக்கு பிறகு ஐசிசி டி20 அணிகளின் பட்டியலில் நம்பர் 1 இடத்தை மீண்டும் இந்தியா பிடித்துள்ளது.
ஆனால் இந்த தொடர் இளம் வீரர் ஒருவருக்கு மட்டும் சோதனை காலமாக இருந்தது. அது சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெயிக்வாட் தான். நியூசிலாந்து தொடர், தென் ஆப்பிரிக்க தொடர், வெஸ்ட் இண்டீஸ் தொடர் என தொடர்ந்து அவர் ப்ளேயிங் 11இல் வாய்ப்பு கிடைக்காமலேயே ஏங்கி வருகிறார்.
நேற்று நடந்த 3ஆவது டி20 போட்டியில் மட்டும் விராட் கோலி விலகியதால் ருதுராஜுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவரால் எடுத்தவுடனேயே சிறப்பாக செயல்பட முடியவில்லை. 4 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். எனவே ஒரே ஒரு போட்டியை வைத்து மட்டும் இலங்கை தொடரில் ருதுராஜுக்கு வாய்ப்பு கிடைக்காது என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.