Advertisement
Advertisement
Advertisement

எனது கிரிக்கெட் பயணத்தில் அது ஒன்று நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் - ஜூலன் கோஸ்வாமி!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் இந்திய மகளிர் அணியின் ஜாம்பவான் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி.

Bharathi Kannan
By Bharathi Kannan September 25, 2022 • 09:15 AM
Each and every moment in my 20-year career has lots of emotions, effort put in: Jhulan Goswami
Each and every moment in my 20-year career has lots of emotions, effort put in: Jhulan Goswami (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி இருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியிலும் இந்திய மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

Trending


மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ளார் இந்திய அணியின் ஜாம்பவான் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி. அவர் விடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணியை வொயிட்வாஷ் செய்தும் இந்திய அணி வீராங்கனைகள் கோஸ்வாமியின் கடைசி தொடரில் கவுரவப்படுத்தினர். 

அவர், பேட்டிங் செய்ய இறங்கியபோது இங்கிலாந்து அணி வீராங்கனைகள் இருபுறம் அணிவகுத்து நின்று அவரை வரவேற்றனர். அதேபோல், பந்துவீச வரும்போதும் இந்திய வீராங்கனைகள் கோஸ்வாமிக்கு வரவேற்பு கொடுத்தனர். இதனால் மைதானத்தில் நெகிழ்ச்சி நிலவியது. கடைசி போட்டியில், 10 ஓவர்களில் வீசி 3 மெய்டன்களுடன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

போட்டிக்கு முன்னதாக பேசிய கோஸ்வாமி, "1997ல் ஈடன் கார்டனில் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் எல்லைகளில் வரும் பந்து பொறுக்கும் சிறுமியாக மைதானத்தில் பணியாற்றினேன். அன்றைய தினம் நானும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என கனவுகண்டேன். அப்படித்தான் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. நிறைய முயற்சி செய்தேன். எனது நாட்டிற்காக விளையாடியது என் வாழ்வில் மிகப்பெரிய தருணம்.

நான் இரண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடினேன், அதில் ஒன்றையாவது வென்றிருந்தால், எனக்கும், இந்தியாவுக்கும், மகளிர் கிரிக்கெட்டிற்கும் சிறப்பாக இருந்திருக்கும். அதுதான் இறுதி இலக்கு. ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அது எனக்கு ஒரு வருத்தம். இந்தியா என்ற பெயர் எழுதப்பட்ட ஜெர்சியை அணிந்துகொள்வது தான் எப்போதும் அனுபவிக்கும் தருணம். அது என் வாழ்வில் எனக்கு மறக்க முடியாத விஷயம்" என்று உருக்கமாக பேசினார்.

ஜூலனைப் பொறுத்தவரை சிறப்பான லைன் மற்றும் லென்த்தில் பந்துவீசச்கூடியவர் என்பதாலேயே ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத்துடன் ஒப்பிடப்படுகிறார். அவரது வேகம் மணிக்கு 120 கி.மீ. பெண்கள் கிரிக்கெட்டில் இது அதிகம். இதனால்தான் இவரை 'சக்தா எக்ஸ்பிரஸ்', 'பெங்கால் எக்ஸ்பிரஸ்' என்று கிரிக்கெட் ரசிகர்கள் அழைக்கப்படுவதும் உண்டு. தற்போது இந்தப் பெயரில்தான் ஜூலனின் வாழ்க்கை வரலாற்றில் அனுஷ்கா சர்மா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement