
ECB To Call English Players From IPL Midway Due To Series Against New Zealand (Image Source: Google)
ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறவுள்ளது. 2018-க்குப் பிறகு நடைபெறும் மெகா ஏலம் என்பதால் இந்த வருட ஏலம் இரு நாள்களுக்கு நடைபெறவுள்ளது. ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னோ, அகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து டெஸ்ட் வீரர்கள், போட்டியின் கடைசிக்கட்டத்தில் விளையாட சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி ஜூன் மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஜூன் 2 அன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.