
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துடனான தோல்வி இதற்கு காரணமாகிவிட்டது.
இந்த உலகக்கோப்பை தொடர் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவருக்குமே மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் இந்த தொடருடன் விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார். இதே போல இந்த தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலமும் முடிவடைகிறது. இதுவரை ஒரு ஐசிசி கோப்பை கூட வென்றுக் கொடுக்காததால் அவரின் பதவிக்காலத்தை நீட்டிக்க பிசிசிஐ முன் வரவில்லை
இந்நிலையில் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகும் ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில், “இந்திய அணியுடனான இந்த பயணம் சிறப்பாக இருந்தது. இந்த பணியை நான் தேர்வு செய்த போது, ஏதேனும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என நினைத்தேன். அதனை செய்துள்ளேன் என நினைக்கிறேன்.