
ENG vs IND, 2nd Test: Fans Throw Bottle Corks At K.L. Rahul On Day 3 (Image Source: Google)
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரின், இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 12ஆம் தெதி தொடங்கியது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்களை குவித்த நிலையில், இங்கிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையல், இப்போட்டியின் மூன்றாவது நாளான நேற்று (ஆக. 14) இந்திய வீரர் கே.எல். ராகுல் பவுண்டரி லைன் அருகே நின்றுகொண்டிருந்தார்.
அப்போது மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் சிலர், அவர் மீது பாட்டில் மூடிகளை (Cork) எறிந்துள்ளனர். இச்சம்பவத்தால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டத்து. இதற்கு ரசிகர்கள், வர்ணனையாளர்கள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.