
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி என அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இந்தியா இழந்தபோதும் புஜாரா - ரஹானே 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
புஜாரா தன்னுடைய வழக்கமான கிளாசிக் பேட்டிங்கால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சோதித்தார். அவரை ஆட்டமிழக்க எவ்வளவோ முயற்சித்தார் கேப்டன் ஜோ ரூட். ஆனால், அவர் நங்கூரம்போல் பேட்டில் நிலைத்து ஆடினார். இருப்பினும், புஜாரா 206 பந்துகளை எதிர்கொண்டு 45 ரன்களை சேர்த்த நிலையில் மார்க்வுட் பந்துவீச்சில் அவர் அவுட்டாகி வெளியேறினார்.
தொடர்ந்து நான்காம் நாள் ஆட்ட நேரம் முடிய 14 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் மொயின் அலி சுழலில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து 61 ரன்களில் வெளியேறினார் ரஹானே. இதனால் கடைசி நேரத்தில் இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது.