Advertisement
Advertisement
Advertisement

ENG vs IND: ‘யார் யா இவன் நம்ம டீம் ல’ குழப்பத்தில் ஆழ்ந்த இந்திய வீரர்கள்; 'இருந்தாலும் உனக்கு தில்லு அதிகம் தான்யா’

இந்தியா - இங்கிலாந்து அணிக்களுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணி ஜெர்சியுடன் மைதானத்தில் நுழைந்த ரசிகரால் பரபரப்பு.

Advertisement
Eng vs Ind, 2nd Test: Pitch Invader casually joins Indian team after lunch
Eng vs Ind, 2nd Test: Pitch Invader casually joins Indian team after lunch (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 14, 2021 • 10:46 PM

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 14, 2021 • 10:46 PM

இதில் இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கெதிராக தனது 7ஆவது சர்வதேச சதத்தைப் பதிவுசெய்தார். 

Trending

இந்நிலையில் இப்போட்டியின் உணவு இடைவேளை முடிந்த பிறகு, இந்திய அணி வீரர்கள் ஃபீல்ட் செட்டை கேப்டன் கோலி செய்து கொண்டிருந்தார். அப்போது இந்திய அணி ஜெர்சியுடன் சக வீரர்களுடன் இணைந்து ரசிகர் ஒருவரும் மைதானத்தில் நுழைந்தார். 

ஆனால் முதலில் இதனை யாரும் கண்டுகொல்லவில்லை, சிறிதுநேரத்தில் அணியில் ஒரு புதுமுகம் இருப்பதைக் கண்ட இந்திய அணி வீரர்கள் திகைத்து நின்றனர்.

 

அந்த ரசிகர்  ‘ஜார்வோ’ என்ற பெயரில் ‘69’ என்ற எண்ணைக் கொண்ட ஜெர்சியுடன் மைதானத்தில் நுழைந்துள்ளதைக் கண்ட மைதான ஊழியர்கள் உடனடியாக விரைந்து அந்நபரைக் குண்டுக்கட்டாக அழைத்து சென்றார். 

இச்சம்பவம் பார்வையாளர்கள் மட்டுமின்றி மைதானத்திலிருந்த இந்திய வீரர்களுக்கு சற்று அதிர்ச்சியைக் கொடுத்தது. இதையடுத்து தற்போது  ‘ஜார்வோ 69’ என்ற ஹெஷ்டெக் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement