
Suryakumar hundred in vain; England defeated India! (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், 3ஆவது டி20 போட்டி இன்று டிரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலிரண்டு போட்டிகளிலும் டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தார் பட்லர். ஆனால் அந்த 2 போட்டிகளிலும் படுதோல்வியை தழுவியதால், இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் மந்தமாக பேட்டிங் ஆடி 26 பந்தில் 27 ரன் மட்டுமே அடித்தார். மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ஜோஸ் பட்லர் 9 பந்தில் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.