
இந்தியா - இங்கிலாந்து இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ரிஷப் பந்த் (146) மற்றும் ஜடேஜாவின்(104) சதங்களால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.
அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை 2ஆம் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ் மற்றும் ஜாக் க்ராவ்லி ஆகிய இருவரின் விக்கெட்டையும் இழந்தது. இருவருமே ஒற்றை இலக்கத்தில் பும்ராவின் பந்தில் வெளியேற, 3ம் வரிசையில் இறங்கிய ஆலி போப்பும் 10 ரன்னில் பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஜோ ரூட்(31), ஜாக் லீச்சும்(0) ஆட்டமிழக்க, 2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் அடித்திருந்தது இங்கிலாந்து அணி. 3ஆம் நாள் ஆட்டத்தை பென் ஸ்டோக்ஸும் பேர்ஸ்டோவும் தொடர்ந்தனர். இருவரும் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 66 ரன்களை சேர்த்தனர். பேர்ஸ்டோ 25 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்த சாம்பில்லிங்ஸும் நன்றாக பேட்டிங் ஆடினார்.