
ENG vs IND: Pant names 4 individuals he turns to for advice (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 4ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் முக்கிய வீரராக அணியில் இடம் பிடிப்பார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் முறையாக அறிமுகமான ரிஷப் பந்த் அந்த அறிமுகப் போட்டியில் சிக்சருடன் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் தொடங்கிய குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தான் விளையாடிய மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்தும் அசத்தி இருந்தார்.
இந்நிலையில் தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இங்கிலாந்து மண்ணில் ரிஷப் பந்த் பங்கேற்க உள்ளது ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.