
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன்கள் குவிக்க இங்கிலாந்து 391 ரன்கள் குவித்து 27 ரன்கள் முன்னிலை பெற்றது.
அதன்பின்னர் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியானது 298 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய பரபரப்பான ஐந்தாவது நாளில் கிடைந்த குறைந்த நேரத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 120 ரன்களில் சுருட்டி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றிக்கு பல தரப்பிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி “எங்களது பந்து வீச்சாளர்களால் 60 ஓவர்களில் இங்கிலாந்து அணியை ஆல் அவுட் ஆக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.