
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று பிரிஸ்டோலில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டேவிட் மில்லர் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் 22 ரன்னிலும், ஜேசன் ராய் 8 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் - பேர்ஸ்டோவ் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதில் 40 ரன்கள் சேர்த்திருந்த மாலன் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்த மொயீன் அலியும் அபாரமாக விளையாடி 18 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.