
England conclude with a total of 391 all out as Day Three comes to end (Image Source: Google)
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து, இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. ஜோ ரூட்டின் அபார சதத்தால் 3ஆவது நாளில் அந்த அணி 300 ரன்களைத் தாண்டியது.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் 150 ரன்களை கடந்தார். ஆனால், மொயீன் அலியால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 27 ரன்கள் எடுத்திருந்தபோது இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தர். அடுத்து களமிறங்கிய சாம் கரன் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.