-mdl.jpg)
இங்கிலாந்து மகளிர் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது இன்று டப்ளினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணிக்கு பிரையோனி ஸ்மித் - டாமி பியூமண்ட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் அபராமாக விளையாடி வந்த பிரையோனி ஸ்மித் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 58 ரன்கள் எடுத்த நிலையில் பிரையோனி ஸ்மித் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய சரென் ஸ்மேல் 25 ரன்களுக்கும், பெய்ஜ் ஸ்காச்ஃபீல்ட் 2 ரன்களுக்கும், ஆடம்ஸ் 16 ரன்களுக்கும், அர்மிடேஜ் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, இறுதிவரை அதிரடியாக விளையாடிய மேடி வில்லியர்ஸ் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து மகளிர் அணி தரப்பில் ஃப்ரீயா சார்ஜென்ட் மற்றும் ஐமி மாகுவேர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் ஏமி ஹண்டர் ஒரு ரன்னிலும், கேப்டன் கேபி லூயிஸ் 2 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய ஓர்லா பிரெண்டர்காஸ்ட் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.