Advertisement
Advertisement
Advertisement

மகளிர் உலகக்கோப்பை 2022: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதில் நுழைந்தது இங்கிலாந்து!

மகளிர் உலகக்கோப்பை 2022: வங்கதேசத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

Advertisement
England will look to defend their crown as they qualify for their semifinals berth in Women's World
England will look to defend their crown as they qualify for their semifinals berth in Women's World (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 27, 2022 • 10:56 AM

நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 27, 2022 • 10:56 AM

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய அந்த அணியில் சோஃபியா டாங்க்லி அரைசதம் அடித்து அசத்தினர். 

Trending

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சோஃபி டாங்க்லி 67 ரன்களையும், நடாலி ஸ்கைவர் 40 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை துரத்திய வங்கதேச அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனால் 134 ரன்களிலேயே வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தன. அந்த அணியில் அதிகபட்சமாக லதா மந்தல் 30 ரன்களை எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்லஸ்டோன், சார்லட் டீன் தலா 3 விக்கெட்டுகளை இழந்தனர். 

இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியதுடம், மகளிர் உலகக்கோப்பை அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement