எங்களது பலமே எங்களில் நிலையான தன்மைதான் - ஈயன் மோர்கன்!
இங்கிலாந்து அணி கேப்டன் ஈயன் மோர்கன் ஐசிசிக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இங்கிலாந்து அணியின் பலமே அணியின் நிலையான தன்மை தான் என தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய இடங்களில் நடக்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதிலிருந்தே தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் இங்கிலாந்து அணி கேப்டன் ஈயன் மோர்கன் ஐசிசிக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இங்கிலாந்து அணியின் பலமே அணியின் நிலையான தன்மை தான் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மோர்கன்,“கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் செய்த நிலைத்தன்மையே எங்கள் அணியின் மிகப்பெரிய பலம் என்று நான் நினைக்கிறேன்.
டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை ஆட்டத்தின் தன்மை விரைவாக மாறும். அதிலும் நாங்கள் எதிர்கொள்ளு அணிகள் திறமனையானவர்கள் என்பதால், ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now