
ENGW vs INDW : Wyatt powers England to the multi-format win! (Image Source: Google)
இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.
இந்திய அணியின் அதிரடி வீராங்கனை ஷஃபாலி வர்மா ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். பின்னர் வந்த வீராங்கனைகளும் அடுத்தடுத்டு சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
ஆனால் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்து ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களைச் சேர்த்தது.