Advertisement
Advertisement
Advertisement

Ind vs Eng: காயம் காரணமாக கேப்டன் விலகல், ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் புனேவில் நடைபெற்று

Bharathi Kannan
By Bharathi Kannan March 25, 2021 • 21:34 PM
Cricket Image for Ind vs Eng: காயம் காரணமாக கேப்டன் விலகல், ரசிகர்கள் அதிர்ச்சி!
Cricket Image for Ind vs Eng: காயம் காரணமாக கேப்டன் விலகல், ரசிகர்கள் அதிர்ச்சி! (Eoin Morgan (Image Source: Google))
Advertisement

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் புனேவில்
நடைபெற்று வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி
66 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை
நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு
வருகின்றனர்.

Trending


இதற்கிடையில் பயிற்சியின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஈயான் மோர்கன்
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த
மருத்துவர்கள் அவரது கையில் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்திய அணிக்கெதிரான மீதமுள்ள ஒருநாள் போட்டிகளிலிருந்து ஈயான் மொர்கன்
விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர்
நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது.

முன்னதாக காயம் காரணமாக இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் தொடரிலிருந்து
விலகுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement