
ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடப்பாண்டு இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பத்து அணிகள் கலந்து கொள்ளும் இந்த உலக கிரிக்கெட் திருவிழா 45 நாட்கள் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற உள்ளது .
உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் இந்த அணிகள் உலகக்கோப்பையின் அரை இறுதிகளுக்கு தகுதி பெறும் மற்றும் எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்பது போன்ற கணிப்புகளில் இப்போதே ஈடுபட தொடங்கிவிட்டனர் .
இதில் பெரும்பாலான விமர்சகர்களின் கருத்தாக இருப்பது இந்தியா ஆஸ்திரேலியா இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆகும் . இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை வாங்கித் தந்த முன்னாள் கேப்டன் ஈயான் மோர்கன் 2023 ஆம் ஆண்டின் உலக கோப்பையை இந்த அணிதான் கைப்பற்றும் என தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார் .