
கடந்த 2011ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய அணியில் அப்போது ஹர்பஜன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். இலங்கைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கவுதம் கம்பீர் 97 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனால் தோனி திடீரென 5ஆவது வீரராக களமிறங்கி 91 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதற்கு முன் நடந்த லீக் ஆட்டங்களில் 5ஆவது வீரராக யுவராஜ் சிங்தான் களமிறங்கியிருந்தார்.ஆனால், இந்தியா சாம்பியன் பட்டம் வென்றபின் ஆட்டநாயன் விருது தோனிக்கு வழங்கப்ட்டது. கம்பீரின் பங்களிப்பு மறக்கடிக்கப்பட்டு,புறக்கணிக்கப்பட்டது. அதன்பின் தோனியால்தான் உலகக் கோப்பையை வென்றோம் என்று தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது
இந்நிலையில் கிரிக்கெட் தொடர்பான நேரலை நிகழ்ச்சியில் முன்னாள் வீரர்கள் முகமது கைஃப், ஹர்பஜன் சிங் இருவரும் நேற்று பங்கேற்றனர். அவர்கள் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையிலான ஆட்டம் குறித்து விவாதித்தனர்.