
Ex-India opener questions decision to name Rahane captain against NZ (Image Source: Google)
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு மட்டும் ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பையில் நடக்கும் 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு அணியில் விராட் கோலி இணைந்துவிடுவார்.
ஆனால் கடந்த பல டெஸ்ட் போட்டிகளாக ரஹானே பேட்டிங் ஃபார்மில் இல்லாத நிலையில் அவரை எவ்வாறு கேப்டனாக நியமித்தார்கள். கடந்த 2 ஆண்டுகளில் ரஹானேயின் டெஸ்ட் சராசரி மோசமாகச் சரிந்துவிட்ட நிலையில் எவ்வாறு கேப்டனாக்கினார்கள் என்று ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, “நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு ரஹானேவை கேப்டனாக்கி இருக்கிறார்கள். ஆனால் உண்மையை நேர்மையாகப் பேச வேண்டும். இங்கிலாந்து எதிராக கடைசி டெஸ்ட் நடந்திருந்தால், நிச்சயம் ரஹானே அணியில் தேர்வு செய்யப்பட்டது கேள்வியை எழுப்பியிருக்கும்.