
சமீப காலமாகவே இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சமூக வலைதளத்தின் மூலம் வைக்கப்பட்டு வந்தன. ஆனால் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது ஆசிய கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய அவர் 35 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்து ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் நடைபெற்று முடிந்த ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் 59 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியிலும் பாகிஸ்தானுக்கு எதிராக 44 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 60 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். அதேபோன்று இந்த ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியல் இரண்டாவது இடத்தில் மூன்று போட்டிகளில் 77 ஆவரேஜுடன் 154 ரன்கள் விராட் கோலி குவித்துள்ளார்.
இந்நிலையில் இந்து தொடரில் விராட் கோலி விளையாடி வரும் விதம் குறித்து புகழ்ந்து பேசியுள்ள கவுதம் கம்பீர் இளம் வீரர்களை சற்று கண்டித்தும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதன்படி நேற்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் தோல்வி குறித்து பேசியிருந்த கம்பீர் கூறுகையில்,