
விண்டீஸ் அணியுடனான கிரிக்கெட் தொடரை நிறைவு செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக அயர்லாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும், அதன்பின் ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்க உள்ளது. ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டமர் 17ஆம் தேதி நிறைவடைய உள்ளது. மொத்தம் 13 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த போட்டி மீது வழக்கம் போல் அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர் என்றால் அது மிகையல்ல. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் பெரிய குழப்பமே நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் தங்களது தற்காலிக அணிகளையே அறிவித்துவிட்டு முழு தயாராக இருக்கும் நிலையில், இந்திய அணியோ டீமில் யார் யாருக்கு இடம் கொடுக்கலாம் என்பதையே தீர்மானிக்க முடியாமல் உள்ளது. இதற்கு காரணம் இந்திய அணியின் தேவையற்ற முயற்சிகளும், தேவையற்ற மாற்றங்களும் தான் காரணமாக பார்க்கப்படுகிறது.