
இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடரானது வரும் 17ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சில வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக இரண்டாவது பாதியில் களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் முதன்முறையாக இந்திய அணியில் தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியில் தேர்வானது குறித்து பேசிய வெங்கடேஷ் ஐயர், “உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. நம் நாட்டில் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் இந்திய அணியின் ஜெர்ஸியை அணிய வேண்டும் என்ற கனவு இருக்கும். எனக்கும் அப்படித்தான் இப்போது எனது கனவு நிஜமாகி உள்ளதில் மகிழ்ச்சி.