
கேரளாவை சேர்ந்த 27 வயதான கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன். 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இதுவரை மொத்தம் 13 டி20 போட்டியிலும், ஒரே ஒரு நாள் போட்டியிலும் மட்டுமே விளையாடியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிரடியாக ஆடும் வீரர். திறமையான விக்கெட் கீப்பர், ஆட்டத்தை தனியாளாக மாற்றும் திறன் என பல திறமைகள் இருந்தும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படவில்லை. நடப்பு ஐபிஎல் சீசனில் 14 போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன், 374 ரன்களை அடித்துள்ளார். ஆனால் அவருக்கு வாய்ப்பு இல்லை.
அதே சமயம், 12 போட்டியில் நடப்பு சீசனில் விளையாடி 182 ரன்களும், விக்கெட்டே எடுக்காத வெங்கடேஷ் ஐயருக்கு மட்டும் இந்திய டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது. இதனால் ஏன் இந்த பாகுபாட்டை பிசிசிஐ காட்டுவதாக ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கேப்டன் ரோஹித் சர்மா தான், ஆஸ்திரேலிய மைதானங்களில் சஞ்சு சாம்சன் போல் ஷாட்கள் ஆடும் வீரர்கள் தேவை என்றும், அவருக்கு ஆதரவு தருவோம் என்று கூறினார்.