
இந்திய அணி தற்பொழுது 3 கேப்டன்களின் கீழ், 3 வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய இளம் அணி சந்தித்தது.
இந்தத் தொடரின் முதல் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட, இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக புதிய கேப்டன் எய்டன் மார்க்ரம்முக்கு டி20 தொடரை வெல்லுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு அமைந்தது. இந்த நிலையில் இன்று தொடரின் மூன்றாவது போட்டியில் நடைபெற்றது.
மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமாக டாஸ் அவர்கள் பக்கமே சென்றது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய, இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 41 பந்தில் 60 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் சூரியகுமார் யாதவ் முதல் 25 பந்தில் 27 ரன்கள் எடுத்து, அதற்கு அடுத்த 31 பந்துகளில், அதிரடியாக 73 ரன்கள் குவித்து, இந்திய அணி 20 அவர்கள் முடிவில் 21 ரன்கள் எடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.