
கடந்தாண்டு ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் தங்கராசு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். அதிலும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நடராஜன் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து வகையிலான கிரிக்கெட்டிலும் தனது கால் தடத்தைப் பதித்தார்.
அதன்பின்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன் கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டார். இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அவர் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். இப்போது பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் மருத்துவர்களின் கண்காணிப்பில் மெல்ல தன்னுடைய பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் நடராஜன்.
இந்நிலையில், அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வந்துள்ள நடராஜன், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவதே தன்னுடைய இலக்கு என தேரிவித்துள்ளார்.