
former-indian-captain-kapil-dev-took-a-jibe-at-hardik-pandya (Image Source: Google)
இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இந்த தோல்வியினால் இந்திய அணியின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அதுமட்டுமின்றி ஏற்கனவே இறுதிப் போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாதது ஒரு மிகப்பெரிய குறையாக உள்ளது என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், சமீப காலமாகவே காயத்தால் அவதிப்பட்டு அவ்வப்போது விளையாட முடியாமல் தவித்து வருகிறார் .