
ரோஹித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட மற்றொரு அணி தற்போது அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரில் முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே விளையாடி வருவதால் இந்த தொடரின் மீதான சுவாரசியம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதோடு ஐபிஎல் தொடரில் கலக்கிய பல இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடரானது பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அயர்லாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.