
Formidable India Look To Continue Winning Streak Against Pakistan In World Cup (Image Source: Google)
கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்திருக்கும் டி20உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. இரு அணிகளும் தீவிரமாகத் தயாராகியுள்ளன.
கடந்த வரலாறு இந்திய அணிக்கே சாதகமா இருந்தாலும், எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள இந்திய அணி தயாராக இல்லை என்ற கணக்கில் தொடர்்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அணிக்கு வலு ேசர்க்கும் வகையில் மென்ட்டராக தோனியையும் பிசிசிஐ நியமித்துள்ளது.
இன்று மாலை போட்டி நடைபெற இருக்கும் நிலையில் நேற்று இந்திய வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டனர்.விராட் கோலி, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நீண்டநேரம் பேட்டிங் பயி்ற்சியில் ஈடுபட்டனர்.