
Four People Wounded In Grenade Blast At Afghan Cricket Match (Image Source: Google)
அமிர் டிராகன்ஸ் மற்றும் பமிர் சாம்லி ஆகிய அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நடைபெற்றது. இதனை காண ஐநா அதிகாரிகள் மைதானத்துக்கு வந்துள்ளனர். இதனையடுத்து, ஐ.நா . அதிகாரிகளை குறிவைத்து போட்டி நடைபெற்று இருந்த போது திடீரென்று தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது.
குண்டு வெடித்ததும், மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். மைதானத்தில் இருந்த வீரர்களுக்கும் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த தாக்குலில் 4 பார்வையாளர்கள் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஐநா அதிகாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன் காபூல் நுழைவு வாயிலில் குருத்வார் ஒன்றில் பயங்கர குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது.