
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது. இப்போட்டியில் 162 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய கொல்கத்தா அணியில், வெங்கடேஷ் ஐயா் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 50 ரன்களும், பேட் கம்மின்ஸ் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 56 ரன்களும் விளாசி வெற்றி பெறச் செய்தனா்.
கொல்கத்தா அணிக்கு 4 ஆட்டங்களில் இது 3ஆவது வெற்றி; 3 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் மும்பைக்கு இது ‘ஹாட்ரிக்’ தோல்வி.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, "நான் பேட் கம்மின்ஸ்ஸிடம் இப்படி ஒரு ஆட்டத்தை எதிர்பார்க்கவில்லை. முதல் இன்னிங்ஸில் நாங்கள் சரியாக தொடங்கவில்லை. ஆனால் கடைசி 4-5 ஓவர்களில் 70 ரன்களை எடுத்தது எங்கள் பேட்ஸ்மேன்களின் பெரும் முயற்சி தான்.