-mdl.jpg)
பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சமீப காலங்களில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் என அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்து விமர்சனங்களுக்கு உள்ளாகியது. இந்நிலையில், நடப்பாண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளதால் அதற்கான முயற்சிகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ளது.
அதன்படி உலக வரலாற்றிலே யாரும் செய்யாத வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய முயற்சி ஒன்றை எடுக்க உள்ளது. அதாவது மிக்கி ஆர்தர் தற்போது இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவர் அந்த பதவியை விட்டு வர முடியாது.
இதனால் பாகிஸ்தான் அணியை ஆன்லைன் மூலம் வழிநடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த முறைக்கு அவர் ஒப்புக்கொண்டால், உலகத்திலேயே முதல் முறையாக சர்வதேச அணிக்கு ஆன்லைன் மூலம் பயிற்சியாளராக செயல்பட உள்ள முதல் நபர் என்ற பெருமையை மிக்கி ஆர்த்தர் பெற உள்ளார்.