
இந்தியாவின் உள்ளூர் புகழ்பெற்ற ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் அனைத்தும் முடிந்து தற்போது காலிறுதி சுற்றுகள் தொடங்கிவிட்டன. காலிறுதி சுற்றின் ஒரு ஆட்டத்தில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற உத்தரபிரதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி இப்போட்டியில் முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணியில் தொடக்க வீரர் ராகுல் திரிபாதி 9, பச்சவ் 11, பவ்னே 37, அஸிம் காஜை 37 ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும், மறுபக்கம் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தார். அரை சதத்தை 71 பந்துகளில் கடந்த அவர், 109ஆவது பந்தில் சதம் அடித்தார். அடுத்து அதிரடி காட்ட ஆரம்பித்த அவர் 138 பந்திகளில் 150 ரன்களையும், 153 பந்திகளில் இரட்டை சதத்தையும் பூர்த்தி செய்தார்.