
Gavaskar feels India have found 'just the player they need for the team' (Image Source: Google)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் தற்போது இந்திய அணி பெற்ற இந்த வெற்றியில் ஷர்துல் தாகூரின் பங்கு மிகவும் முக்கியமானது என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஷர்துல் தாகூர் குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில்,“ஆஸ்திரேலிய தொடரின் போது கபா டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து இருந்தார். அதே போன்று தற்போது ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்தது மட்டுமின்றி தனது பந்து வீச்சிலும் அசத்தலாக செயல்பட்டார். இவர் நிச்சயம் இந்திய அணி தேடும் நீண்டகால டெஸ்ட் பிளேயராக திகழ்வார்.