
மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் வலுவான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
அதன்படி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் சோபி டங்க்லி 4 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து வோல்வாட்டுடன் இணைந்த ஹர்லீன் தியோல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
அதன்பின் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 31 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஷ்லே கார்ட்னர் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினாலும், இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டினார். அதேசமயம் மறுமுனையில் அபாரமாக விளையடைய லாரா வோல்வார்ட் அரைசதம் கடந்து அசத்தினார்.