
இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 24ஆஆவது லீக் ஆட்டத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 309 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை சுருட்டி இந்த உலகக் கோப்பை தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்ததோடு புள்ளி பட்டியலிலும் தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இன்றைய போட்டி துவங்கியதும் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி சார்பாக டேவிட் வார்னர் 104 ரன்களையும், மேக்ஸ்வெல் 106 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 21 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்களை மட்டுமே குவித்தது.