Advertisement

ஐபிஎல் 2024: காயத்தை சந்தித்த கிளென் மேக்ஸ்வெல்; ஆர்சிபி அணிக்கு பின்னடைவு!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் விரலில் காயமடைந்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 12, 2024 • 15:34 PM
ஐபிஎல் 2024: காயத்தை சந்தித்த கிளென் மேக்ஸ்வெல்; ஆர்சிபி அணிக்கு பின்னடைவு!
ஐபிஎல் 2024: காயத்தை சந்தித்த கிளென் மேக்ஸ்வெல்; ஆர்சிபி அணிக்கு பின்னடைவு! (Image Source: Google)
Advertisement

மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 61 ரன்களையும், ராஜத் பட்டிதார் 50 ரன்களையும் சேர்க்க, இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 53 ரன்களைச் சேர்த்தார். மும்பை அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷான் - ரோஹித் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் ஒடுத்து அசத்தினர். இதில் இஷான் கிஷான் 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 7 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 69 ரன்களில் இஷான் கிஷான் விக்கெட்டை இழக்க, மறுப்பக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மாவும் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் தனது கம்பேக் போட்டியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 17 பந்துகளில் அரைசதம் கடந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

Trending


மறுப்பக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக விளையாடி 21 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது.  இப்போட்டியில் ஆர்சிபி அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் காயமடைந்து போட்டியின் பாதியிலேயே விலகினார். 

 

அதன்படி, இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய வந்த சூர்யகுமார் யாதவ் ஆர்சிபி வீரர் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் பாய்ண்ட் திசையில் பந்தை பவுண்டரி அடிக்க முயற்சித்தார். அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த கிளென் மேக்ஸ்வெல் கேட்ச் பிடிக்க முயற்சித்த போது பந்து அவரது கையில் பட்டு சென்றது. இதனால் கேட்சை தவறவிட்ட கிளென் மேக்ஸ்வெல், தனது விரல் பகுதியிலும் காயமடைந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் இக்காயம் காரணமாக கிளென் மேக்ஸ்வெல் அடுத்த சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ஆர்சிபி அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement