
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார். கிரிக்கெட்டில் மட்டும் ஹீரோவாக இல்லாமல், தற்போது அவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவென நிரூபித்துள்ளார். நேற்று உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் இருந்து சிறிது தொலைவில் ஒரு கார் விபத்துள்ளாகியுள்ளது. இது இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி காருக்கு முன் நடந்துள்ளது.
அப்போது, விபத்தை பார்த்த அவர் தனது காரை நிறுத்தி காரில் இருந்தவர்களை காப்பாற்றியுள்ளார். இந்த முழு சம்பவத்தின் காணொளையையும் முகமது ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பகிரப்பட்ட தகவலில்படி, நனிடால் செல்லும்போது, சிறிது தூரத்திற்கு முன்பு அவருக்கு முன்னால் கார் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின்போது காரில் சிலர் இருந்துள்ளனர். இதையடுத்து, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தனது காரை நிறுத்தி, காரில் இருந்தவர்களை தனது நண்பர்களுடன் வெளியே இழுத்து காப்பாற்றியுள்ளார்.
தொடர்ந்து, அடிப்பட்டவர்களுக்கு முகமது ஷமியே முதலுதவி செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ள கேப்ஷனில், “ஒருவரை காப்பாற்றியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் தற்போது இரண்டாவது முறையாக பிறந்துள்ளார். அவரது கார் நானிடால் அருகே உள்ள மலைப்பாதையில் இருந்து என் முன்னால் கீழே விழுந்தது. அவர்கள் எல்லாரையும் நாங்கள் காப்பாற்றிவிட்டோம்” என கூறியுள்ளார்.