
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது ஹைபிரிட் மாடலில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரங்களில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இந்த அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டார் ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் வங்கதேச அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர், அதில் சோபிக்க தவறியதன் காரணமாக ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது மோசமான ஃபார்ம் காரணமாகவே சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வங்கதேச அணியில் தன்னை சேர்க்கவில்லை என்று லிட்டன் தாஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.