
ஐபிஎல் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தாண்டு சற்று மோசமானதாக அமைந்துள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை மட்டுமே பெற்று ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்டது.
ரவீந்திர ஜடேஜாவின் தலைமையில் இனி சென்னை அணி கலக்கப்போகிறது என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கேப்டன்சி பிரச்சினையால் ஜடேஜாவால் தனது ஆட்டத்தை கூட சிறப்பாக முடியவில்லை. இதனால் கடைசி நேரத்தில் மீண்டும் தோனியிடமே கேப்டன் பதவியை கொடுத்துள்ளார் ஜடேஜா. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் புகழ்ந்து பேசியுள்ளார். அதில், “அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட அணியை எதிர்த்து விளையாட பிடிக்கும். அந்தவகையில் ஆர்சிபிக்கு எதிராக ஜடேஜா சிறப்பாக செயல்பட்டுவிட்டார். ஆனால் மற்ற அணிகளுடன் அவரால் சரியாக வழிநடத்த முடியவில்லை. அவருக்கு கேப்டன்சி செய்ய வரவில்லை என்பது தான் இதற்கு அர்த்தம்.