
நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரையிறுதி சுற்றுக்கான நேரம் நெருங்கி வருவதால் அனைத்து அணிகளும் தங்களது கடைசி கட்ட போட்டிகளில் கவனம் செலுத்தி வருகின்றன.
ஆனால் அவை அனைத்தையுமே ஆஸ்திரேலியாவில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் கெடுத்து விடுகின்றன. இன்று காலை ஆஃப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி நடைபெறவிருந்தது. இரு அணிகளுமே சம பலத்தில் இருந்ததால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை காரணமாக போட்டி டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று மதியம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை இருந்தன. மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெறவிருந்த இந்த போட்டியிலும் மழையின் தாக்கம் இருந்தது. நீண்ட நேரம் காத்திருந்தும் மழை கருணை காட்டாததால் போட்டி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.