
ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுக்க அனைத்து அணிகளும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த ஏலத்திற்கு முன்பாக பரஸ்பர பரிமாற்றம் அடிப்படையில் குஜராத் அணி வேகப்பந்துவீச்சாளர் லோக்கி ஃபெர்குசன், அதிரடி ஆட்டக்காரர் குர்ப்ராஸ் ஆகியோரரை கொல்கத்தா அணிக்கு கொடுத்தது.
இதையடுத்து அந்த அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் தேவை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது,
“நீங்கள் கோப்பையை வென்றாலும் அணியில் சில மாற்றங்களை தேவைக்கு ஏற்ப செய்ய வேண்டும். எங்களது அணிக்கு தற்போது சிறந்த வேகப்பந்து வீச்சாளர் தேவை . சிறிய ஏலத்தில் அணிக்கு தேவையான மாற்றங்களை மேற்கொள்ள அனைத்து அணிகளும் முயல்வர். அதையே தான் நாங்களும் செய்யப் போகிறோம்.