
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி சாய் சுதர்சன் மற்றும் சாஹாவின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.
இதையடுத்து சென்னை அணியின் பேட்டிங்கின் போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் சென்னை அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி சென்னை அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். இந்த வெற்றியால் எமோஷனலான தோனி, ஜடேஜா தூக்கி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து இந்ததோல்வி குறித்து பேசிய குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா,“நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடினோம் என்று நம்புகிறேன். நாங்கள் அனைவரும் எப்படி ஒன்றாக வெல்கிறோமோ, அதேபோல் ஒன்றாகவே தோற்கிறோம். தோல்விக்கு எந்த காரணங்களையும் கூற விரும்பவில்லை. சிஎஸ்கே அணி எங்களை விட சிறந்த கிரிக்கெட்டை விளையாடியுள்ளது. எங்கள் பேட்டிங் சிறப்பாக அமைந்தது. குறிப்பாக சாய் சுதர்சன் ஆட்டம் மிரட்டலாக இருந்தது.