
Gurugram Police Thanks Shikhar Dhawan For Donating Oxygen Concentrators (Image Source: Google)
இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன், மருத்துவமனை உபகரணங்கள் ஆகியைவைகாக மக்கள் போராடி வருகின்றனர்.
இதற்காக கிரிக்கெட் உலகை சேர்ந்த சச்சின், விராட் கோலி, நிகோலஸ் பூரண், பேட் கம்மின்ஸ், பிரட் லீ ஆகியோர் உதவி செய்திருந்தனர். ஆனால் ஷிகர் தவான் ஒரு முறை நிவாரணம் வழங்கியதோடு நின்று விடாமல் தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார்.
ஐபிஎல்-ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஷிகர் தவான், சமீபத்தில் கரோனா முதல் தவணை தடுப்பூ செலுத்திக் கொண்டார். ஏற்கெனவே கரோனா நிவாரணத்துக்கு ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கிய அவர், அதுப்போக, ஐபிஎல் 2021 தொடரில் அவர் ஆட்ட நாயகன் விருதுகள் உள்ளிட்டதன் மூலம் கிடைத்த தொகைகளையும் கரோனா நிவாரணத்துக்கு நன்கொடையாக அளித்தார்.