
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்றுல் பல்லகலேவில் நடைபெற்றது. மழை காரணமாக 44 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் மற்றும் குடகேஷ் மோட்டி ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் 36 ஓவரில் 189 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சகாம ரூதர்ஃபோர்டு 80 ரன்களையும், குடகேஷ் மோட்டி 50 ரன்களையும் சேர்த்தனர்.
இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக வநிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷனா, அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் நிஷான் மதுஷ்கா மற்றும் சதீரா சமரவிகரமா ஆகியோரும் தலா 38 ரன்கள் எடுத்தனர்.