
ஆசியக் கோப்பை 2022-ன் இறுதிப் போட்டி நேற்று இரவு நடைபெற்றது.துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணியில் ஓபனர்கள் குஷல் மெண்டிஸ் 0 , நிஷங்கா 8 ஆகியோர் சொதப்பினர். மற்ற டாப் வரிசை வீரர்களும் சொதப்பியதால் இலங்கை அணி 58/5 எனத் திணறியது. அடுத்து ராஜபக்சா 71 காட்டடி அடித்து அசத்தினார். தொடர்ந்து ஹசரங்கா 36 ரன்களை சேர்த்ததால் இலங்கை அணி 20 ஓவர்களில் 170/6 ரன்களை எடுத்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஓபனர் முகமது ரிஸ்வான் 55, இப்டிகார் அகமது 32 ஆகியோர் மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்தார்கள். பாபர் அசாம் 5 உட்பட மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்களை எடுத்ததால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 147/10 ரன்களை மட்டுமே சேர்த்தது.