
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 19 முதல் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இதனைய்டுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்திய அணியும் விரைவில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியை அறிவிக்கும் எனத் தெரிகிறது. இதில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதிலும் குறிப்பாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக யார் இடம்பெற வேண்டும் என்பது கவனம் பெற்றுள்ளது. ஏனெனில் இந்த பட்டியலில் சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் சஞ்சு சாம்சன் ஓராண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் 3 சதங்கள் விளாசிய முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் படைத்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தன்னுடைய இத்தொடருக்கான இந்திய அணியைத் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த அணியில் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு அவர் இடம் கொடுக்கவில்லை. இதுகுறித்து அவர் தனது யூடியூப் சேனலில் ஒரு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியைத் தேர்ந்தெடுப்பது காணொளியாக உள்ளது.